கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சோதனை நடவடிக்கைகள் குறித்த பகுதிகளின் சில இடங்களில், வீதித் தடைகளை பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன், புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed